புதுதில்லி, ஜூன் 25- பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர வை கூட்டத்தில் விண்வெளித் துறையிலும் தனியார் பங்களிப்பை அனுமதித்து மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. விண் வெளித் துறையில் தனியார் நிறு வனங்களின் பங்களிப்பை அனு மதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்து வது தொடர்பாக சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி, ஊக்கு விப்பு மற்றும் அங்கீகார மையம் - ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ அரசாங்கம் ஒப்புதல் அளித்துள் ளது.
இது விண்வெளி முயற்சி களில் தனியார் துறையை கையா ளுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு தேசிய நிறுவனமாக செயல் படும், இதற்காக இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை யும் வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.